search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் புகார்"

    • திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கல்லூரி பேராசிரியை பாலியல் புகார் கொடுத்துள்ளார்
    • வீடியோ காலில் வந்து தொல்லை கொடுப்பதாக பரபரப்பு புகார்

    திருச்சி,

    சென்னை வேளச்சே–ரியை சேர்ந்தவர் திரிஷா (வயது 27, பெயர் மாற்றப் பட்டுள்ளது). தற்போது இவர் திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த பெண் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சென்னையைச் சேர்ந்த நான் திருச்சியில் தங்கி எம்.எஸ்சி. கணிதம் படித்து வருகின்றேன். மேலும் இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருகிறேன்.

    இந்தநிலையில் எனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கோட்டை அனைத்து மக–ளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் எனது செல்போனை அந்த காவல் நிலைய அதிகாரி விசாரணைக்காக வாங்கி வைத்துக்கொண்டார். இதற் கிடையே அந்த முதல் தகவல் அறிக்கை–யில் சில தவறான தக–வல்கள் இடம்பெற்று இருந்ததால அதனை திருத்தம் செய்வதற்காக மீண்டும் துணை போலீஸ் கமிஷனை சந்திக்க கமி–ஷனர் அலுவலகத்துக்கு சென்றேன்.

    அப்போது திருச்சி மாநகரில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னைப் பற்றிய விவ–ரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்து அவரும் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் வந்து தொல்லை கொடுத்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி உட்பட சில போலீசாரும் உதவியாக இருக்கின்றனர். என்னை தாக்கி தவறாக வீடியோவும் எடுத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
    • பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட டாக்டர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பணியை புறக்கணித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணியில் உள்ள பயிற்சி பெண் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும், பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட டாக்டர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்தாக கூறப்பட்ட டாக்டர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மருத்துவகல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

    புதுடெல்லி :

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் அவர்களைத் தடுத்து, சமாதானப்படுத்தினார். அதையடுத்து வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்வதற்கு அவருக்கு எதிராக போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை டெல்லி போலீஸ் கூறியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளில் போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை என போலீஸ் கூறியதாக சில டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலீஸ் அவ்வாறு தெரிவித்ததாக வெளியான செய்தி தவறு. உணர்வுபூர்மான இந்த வழக்கில், மிகுந்த உணர்வோடு விசாரணை நடைபெற்றுவருகிறது' என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், 'டெல்லி போலீஸ் தனது விசாரணையை முடிக்கும்வரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் காத்திருக்க வேண்டும். மல்யுத்தத்தையும், மல்யுத்த வீரர்களாக விரும்புவோரையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 'நாங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆதரவாகத்தான் உள்ளோம்' என்றும் அவர் கூறியுள்ளார்.

    • மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர்.
    • விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் தனலட்சுமி தலைமையிலான விசாகா குழுவினர், இந்த விசாரணையை நடத்தினர்.

    கடந்த 10-ந் தேதி விசாரணை தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. புகார் கூறியவர்களில் 21 மருத்துவ மாணவிகள், ஒரு செவிலியர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள், விசாகா கமிட்டி முன்பாக விசாரணைக்கு ஆஜரானபோது, ஒருவித அச்சத்தோடு இருந்தனர். செய்யது தாகிர் உசேன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், கேலியான பெயரை கூறி அழைத்ததாகவும், ஆபரேசன் தியேட்டருக்கு செல்லவே தயக்கமாக இருந்ததாகவும் விசாரணையின்போது, பெரும்பாலானவர்கள் கூறினர்.

    விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனையில் 62 சதவீதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். செய்யது தாகிர் உசேன் மீது 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு புகார்கள் வந்தன. ஆனால் எழுத்துப்பூர்வமாக கிடைக்கவில்லை. ஆனால் தற்போது 23 மாணவிகள் கைப்பட எழுதி புகார் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு பழிவாங்கும் நோக்கம் இல்லை. பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்யது தாகிர் உசேன் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இதுவரை எழுத்துப்பூர்வமாக அளித்த அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் 19-வது நாளாக நீடித்து வருகிறது.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மத்திய விளையாட்டுத்துறை, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • பக்கிரிசாமியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்தார்.

    இவர் தனது பள்ளியில் படிக்கும் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பள்ளி தாளாளர் பக்கிரிசாமி கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், பள்ளி தாளாளர் பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பக்கிரிசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார். 

    • வீரகாந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டார்.
    • வீரகாந்தியை டிஸ்மிஸ் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வீரகாந்தி. இவர் பணியில் இருந்தபோது கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் தென்மண்டல ஐ.ஜி.க்கு புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த அப்போதைய திண்டுக்கல் டி.ஐ.ஜி. விஜயகுமாரிக்கு ஐ.ஜி. உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியின் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா விசாரணை மேற்கொண்டார்.

    புகார் அளித்த பெண் காவலர், அவருடன் பணிபுரிந்த காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வீரகாந்தி தனது செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்களை பெண் காவலருக்கு அனுப்பி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வீரகாந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டார். கடந்த 2 வருடமாக பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார்.

    இந்நிலையில் வீரகாந்தியை டிஸ்மிஸ் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரகாந்தி திண்டுக்கல் மதுவிலக்கு மற்றும் எஸ்.பி. தனிப்படை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாலியல் புகாரில் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார்.
    • சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட சலீமுடன் அந்த பெண் சென்றது தெரியவந்தது

    செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் கிருஷ்ணவேணி என்பவரது வீட்டின் கதவை இளம்பெண் ஒருவர் தட்டியுள்ளார். தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து போராடி தப்பி வந்ததாகவும் காவல் நிலையத்தில் தன்னை ஒப்படைக்கும் படி கூறி உள்ளார்.

    இதனைஅடுத்து சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கை களத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி டெலிகாலராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    இவருக்கும் உத்திரமேரூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அதேபோல நேற்று இரவும், செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த பெண்ணை சலீம் சாலவாக்கம் அருகே மாம்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே திருமணம் செய்து கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பெண்ணை தாக்கிய சலீம் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதைத்தொடர்ந்து அப்பெண் அருகே இருந்த வீட்டிற்கு சென்று சலீமை காவல்துறையிடம் சிக்க வைக்க கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடியிருக்கிறார்.

    முன்னதாக காவல்துறையினரிடம் தன்னை காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக பெண் கூறியதால் செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட சலீமுடன் இரு சக்கர வாகனத்தில் அந்த இளம்பெண் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் திவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

    • சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.
    • மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று உள்ளார்.

    இந்தநிலையில் மந்திரி சந்தீப்சிங் மீது தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்.

    ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டார் என்றும் நான் அங்கு அறையில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்ததாகவும் பெண் பயிற்சியாளர் தெரிவித்தார்.

    இதுகுறித்து மாநில காவல்துறை தலைவர் உள்துறை அமைச்சர், முதல்-மந்திரியை சந்தித்து முயற்சித்தபோதும் சந்தீப் சிங்கின் தலையீட்டால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மந்திரி சந்தீப் சிங் திட்டவட்டமாக மறுத்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் பயிற்சியாளரின் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.

    இந்த நிலையில் பெண் பயிற்சியாளரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் மீது சண்டிகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறும் போது, பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில் அரியானா மந்திரி சந்தீப் சிங் மீது 5 பிரிவுகளின் கீழ் சண்டிகரில் உள்ள செக்டார்-26 போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.

    இந்நிலையில், அமைச்சர் தனது இலாகாவை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் நிராகரித்துள்ள அவர், இது தனது இமேஜைக் கெடுக்கும் முயற்சி என்று தெரிவித்தார். என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

    • கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.
    • மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டதாக மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.

    அப்போது மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார். மேலும் உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நேற்று சி.பி.ஐ. திருவனந்தபுரம் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

    • தலைமறைவான வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    • பாலியல் புகாரில் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்தி நகர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் பிரதீப் (வயது 23) கட்டிட தொழிலாளியான இவர், தனது நண்பர்களான சதீஷ்குமார், ஹரி பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் உள்ளிட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவான வாலிபர்களை தேடி வருகின்றனர்.




    • குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தீவிரம்
    • கவுதமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து காசியை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட காசி மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காசி மீது பாலியல் புகார் உள்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இதையடுத்து வழக்கானது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசி மீதான வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் ஆதாரத்தை அழித்ததாக கூறி அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அதே சமயம் அஞ்சுகிராமம் அருகே கண்ணன்குளத்தை சேர்ந்த கவுதம் என்பவர் தலைமறைவாக இருந்தார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த 8 வழக்குகளில் 6 வழக்குகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 2 வழக்குகளில் கவுதமுக்கு தொடர்பிருந்ததால் அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. காசிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கவுதம் வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தார். இதுதொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருவனந்தபுரம் சென்று விமான நிலையத்தில் இருந்த கவுதமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து கவுதமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து கவுதமனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி போலீசார் கவுதமை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். காசிக்கும், கவுதமுக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் காசிக்கு உதவியாக பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து மீண்டும் கவுதமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மேலும் 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    ×